×

விபத்தில் வாலிபர் பலி

சிவகாசி, ஜன. 28: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர்கள் முத்துக்குமார் (22), மாரிச்செல்வம் (29). இருவரும் திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் டூவீலரில் வந்தனர். அப்போது எரிச்சநத்தத்திலிருந்து சிவகாசி வந்த அரசு பஸ்,  டூவீலரில் மோதியதில் காயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் இறந்தார். மாரிச்செல்வம் சிகிச்சை பெற்று வருகிறார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : accident ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...