×

வட்டார வேளாண்மை துறை சார்பில் மல்லி கிராமத்தில் வயல் தினவிழா

திருவில்லிபுத்தூர், ஜன. 28: திருவில்லிபுத்தூர் வட்டார வேளாண்மை துறை சார்பில் வயல் தினவிழா மல்லி கிராமத்தில் நடைபெற்றது.
திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் தானிய பயிரான மக்காச்சோளத்தில் உயர் தொழில்நுட்ப செயல்விளக்க திடல் 49 ஹெக்டரில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பருவத்தில் மல்லி கிராமத்தில் உள்ள வயலில் வயல் தினவிழா தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மாவட்ட ஆலோசகர் பூலிங்கம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பருத்தி நிலைய பூச்சியியல் பேராசிரியர் சசிகுமார் கலந்துகொண்டு மக்காச்சோளம் பயிரில் படைப்புழு கட்டுப்பாடு குறித்து விளக்கி கூறினார். உயர் தொழில்நுட்ப செயல்விளக்க திடல் அமைந்துள்ள விவசாயி தர்மகிருஷ்ணன் மக்காச்சோள சாகுபடியில் அவரது அனுபவத்தினை பிற விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டார்.

Tags : Field day festival ,agriculture department ,Malli village ,
× RELATED மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம்: வேளாண்துறை ஆலோசனை