×

கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் பள்ளி பரிமாற்றத் திட்டம் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

வேதாரண்யம், ஜன.27: வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம்-4ம் சேத்தியில் கோவில்குளத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு களப்பயணம் சென்றனர்.
ஆயக்காரன்புலம் கோவில்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 20 பேர் பள்ளி பரிமாற்றத்திட்டத்தின் கீழ் ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு அப்பள்ளி மாணவ-மாணவிகளோடு இறைவணக்கம், யோகா பயிற்சி பள்ளியில் பாடம் கற்பித்தல் பள்ளியின் சுற்றுசூழல் அறிதல் மாணவர்களின் கருத்து பரிமாற்றம் ஆகியவற்றை மேற்கொண்டனர். பின்பு அங்குள்ள அய்யனார் கோவிலில் சென்று தூய்மைப்பணியை மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பரஞ்சோதி அறிவியல் ஆசிரியர் செந்தில் பள்ளி ஆசிரியர்கள் விமலா, ஜெயமங்களம், சாந்தி, சிவரஞ்சனி, எழிலரசி கோவில்குளம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருள்செல்வன் தமிழாசிரியர் சிலம்புச்செல்வன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்து சென்ற மாணவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி வகுப்பறையில் சுற்றுசு+ழல் தூய்மை மரம் வளர்ப்பு குறித்து ஆசிரியர்கள் எடுத்துக்கூறினர்.

Tags :
× RELATED மயிலாடுதுறை பொறையாரில் நிவேதாமுருகன் எம்எல்ஏ வாக்களித்தார்