×

கொசுக்கடியால் மக்கள் அவதி

சிங்கம்புணரி, ஜன.28: சிங்கம்புணரி நகரில் காசியாபிள்ளை நகர், வேட்டையன் பட்டி, அருண் அரணத்தாங் குண்டு, கூத்தாடி அம்மன் கோவில் தெரு, வீரமுத்தி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. இதனால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நாடார்பேட்டை பகுதியில் உள்ள பள்ளங் குண்டு ஊரணியில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை