பொதுமக்கள் கோரிக்கை அப்பாத்துறையில் பொதுமக்கள் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும்

லால்குடி, ஜன.28: அப்பாதுறை ஊராட்சியில் பொதுமக்கள் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்பாத்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் கூட்டம் தலைவர் குருசாமி தலைமையில் நடந்தது. துணை தலைவர் பிரபாகரன், ஊராட்சி செயலாளர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் காத்தான், விஏஓ சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் ராஜா, கிருஷ்ணவேணி, சுமதி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

மேலவாளாடியில் குடிநீர் வசதி, மின்விள க்கு வசதி, விளையாட்டு மைதானம், சுகாதார வளாகம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும் குகைவழிப்பாதை அமைக்க மக்களின் நிபந்தனையுடன் அமைக்க வேண்டும். அப்பாத்துறை செல்லும் வழியில் உள்ள சேதமடைந்த பாலத்தை உடனே சீரமைக்கப்படும். குப்பை தொட்டிகள் இல்லாத இடத்தில் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரயில்வே குகை வழிப்பாதை அமைக்க நிபந்தனையுடன் அமைக்கப்படும். பொதுமக்கள் பிரச்னைகள் உடனுக்கடன் தீர்க்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகளில் நடந்த குடியரசு தினவிழாவில் தலைவர் குருசாமி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.

Related Stories: