திருவானைகோவிலில் தலைமையாசிரியர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை

திருச்சி, ஜன.28: திருச்சியில் பள்ளி தலைமையாசிரியர் வீட்டில் 18 பவுன்நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். திருச்சி திருவானைக்காவல் வித்யாலயாகணபதி நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி கல்யாணி (50). இவர் திருச்சி அடுத்துள்ள உத்தமர்சீலி ஊராட்சி பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளார். இவர் நேற்றுமுன்தினம் குடியரசுதினத்தை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டார். விழா முடிந்து மாலை வீடு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து தலைமையாசிரியர் அளித்த புகாரின்பேரில் ரங்கம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: