துறையூர் அருகே பைக்-கார் மோதல் ஒருவர் பரிதாப பலி

துறையூர், ஜன.28: துறையூர் அருகே காரை முந்திச்செல்ல முயன்ற பைக் மீது எதிரே வந்த கார் மோதியதில் பைக் ஓட்டியவர் பலியானார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள ஒக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் வீரப்பன் மகன் சுகர்னோபாபு(43). இவர் நேற்று மாலை உப்பிலியபுரத்திலிருந்து ஒக்கரைக்கு தனது பைக்கில் சென்றார். துறையூர்-ஆத்தூர் சாலையில் ஒ.கிருஷ்ணாபுரம் அருகே முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் சுகர்னோபாபு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து உப்பிலியபுரம் போலீஸார் சம்பவ இடம் சென்று சடலத்தை துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: