×

பொன்னமராவதியில் தமிழர் திருவிழாவில் தமிழன்னை ஊர்வலம்

பொன்னமராவதி, ஜன.26: பொன்னமராவதியில் முத்தமிழ் பாசறை சார்பில் தமிழர் திருவிழாவில் தமிழன்னை ஊர்வலம் நடந்தது. பொன்.புதுப்பட்டி சேங்கை ஊரணிக்கரையில் தமிழன்னை ஊர்வலத்திற்கு ஊர்வலக் குழுத்தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். முத்தமிழ் பாசறைத் தலைவர் சந்திரன், செயலாளர் சதாசிவம், பொருளாளர் முருகேசன், விழாக்குழுத்தலைவர் சிங்காரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராஜன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரான்ஸிஸ் மேரி, சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த ஊர்வலத்தில் குதிரையாட்டம்,சிலம்பாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், போன்றவை தமிழன்னையுடன் சென்றது. பொன்.புதுப்பட்டியில் தொடங்கிய ஊர்வலம், நகைக்கடைபஜார், அண்ணாசாலை, பஸ்நிலையம்,
வழியாகச்சென்று சிவன் கோயில் திடலில் முடிந்தது. இதில் முன்னாள்எம்எல்ஏ ராம.சுப்புராம், அறங்காவலர்குழுத்தலைவர் டாக்டர் சின்னப்பா, முன்னாள் தலைவர்கள் நடராஜன், மதியழகன், ரமேஷ், மாணிக்கவேலு, துணைத் தலைவர் மாரிமுத்து, வர்த்தக கழகத்தலைவர் பழனியப்பன், லயன்ஸ் சங்கத் தலைவர்கள் பெரியசாமி, விஜயரெங்கன், சோலையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணைத்தலைவர் மலைச்சாமி வரவேற்றார். முடிவில் அறங்காவலர் குழுஉறுப்பினர் ராஜாமுகமது நன்றி கூறினார்.

Tags : Tamilnadu ,processional ,Ponnamaravathi Tamil Festival ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு