×

தீயணைப்பு துறையினர் அணைத்தனர் தூத்தூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

அரியலூர், ஜன. 28: அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த தூத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது. கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து கலெக்டர் ரத்னா பேசியதாவது: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அரியலூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் 2019-20 பருவத்தில் அரியலூர் வட்டத்தில் தூத்தூர் மற்றும் உடையார்பாளையம் வட்டத்தில் கோடாலிக்கருப்பூர் ஆகிய ஊர்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களை அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், தாசில்தார் கதிரவன் மற்றும் விவசாயிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Firemen ,opening ,Duttur village ,rice paddy purchasing station ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் 48...