×

ராசிபுரத்தில் தகராறு டைலர் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபர் கைது

ராசிபுரம், ஜன.28:  ராசிபுரத்தில் தகராறில் டைலர் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ராசிபுரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமரவேலு மகன் சந்திரசேகர் (39). இவர் ராசிபுரத்தில் உள்ள ஒரு கடையில், டைலராக வேலை பார்த்து வருகிறார். தினமும் வேலை முடிந்து வரும்போது, காஞ்சி சூப்பர் மார்க்கெட் அருகில் இருக்கும் மற்றொரு டைலர் நண்பரான டேவிட்டுடன் பேசிவிட்டு வருவது வழக்கம். கடந்த ஒரு வாரத்திற்கு முன், இரவு 10 மணிக்கு நண்பர் டேவிட்டுடன் சந்திரசேகர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக டூ வீலரில் வந்த எல்.ஐ.சி காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (31), சாலையோரமாக நின்று பேசமாட்டீர்களா என மிரட்டி சென்றுள்ளார். அதேபோல், கடந்த 25ம் தேதி இரவு 10 மணிக்கு சந்திசேகரன் மற்றும் டேவிட் ஆகியோர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கார்த்திக் இவர்களிடம் வந்து தகராறு செய்துள்ளார். பின்னர் அப்பகுதியிலேயே சிறுநீர் கழித்துள்ளார். அதை சந்திரசேகரன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது கோபம் அடைந்த கார்த்திக், மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்திரசேகரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடி விட்டார். படுகாயமடைந்த  சந்திரசேகரனை, டேவிட் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சந்திரசேகரன் கழுத்தில், 24 தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிந்த ராசிபுரம் போலீசார், கார்த்திக்கை கைது செய்தனர்.

Tags : Tyler ,
× RELATED ரோகித், கோஹ்லி, கில்லை வீழ்த்தினால்...