×

சாலையில் மண் கொட்டி சமப்படுத்திய காவல்துறை

குமாரபாளையம், ஜன.28: வாகனங்களின் சிரமத்தை தவிர்க்க சாலையில் மண் கொட்டி போலீசார்  சமப்படுத்தினர். இதற்காக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். குமாரபாளையம் நகரிலிருந்து வரும் வாகனங்கள், பைபாஸ் சாலையை சந்திக்கும் இடத்தில் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் உள்ளது. இதன் காரணமான கார்கள், மினி லாரிகள் பைபாஸ் சாலையில் ஏறுவதற்கு சிரமப்பட்டு வந்தன. பக்கச்சாலையிலிருந்து வேகமாக வந்து பைபாஸ் சாலையில் ஏற வேண்டிய நிலை இருந்ததால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து குமாரபாளையம் காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டு வரும் நிலையில், இப்படியொரு அவலநிலை இருப்பதை கண்ட போலீசார், தற்காலிக ஏற்பாடாக மூன்று லாரி செம்மண் கொண்டு வந்து, மேடு பள்ளத்தை நிரப்பினர். இதனால் சிறு வாகனங்கள் சிரமமின்றி, பைபாஸ் சாலையில் ஏறிச்செல்ல வகை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...