×

தோகைமலையில் மா. கம்யூ. கட்சி சார்பில் இந்திய அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தோகைமலை, ஜன. 28: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் முன்னுரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தோகைமலை பேருந்து நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். கட்சியின் நிர்வாகிகள் சங்கப்பிள்ளை, முனியப்பன், தங்கராசு, பாப்பாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழு உறுப்பினர் இலக்குவன் கலந்து கொண்டு பேசினார். இந்திய அரசியல் சாசனத்தின் முன்னுரையில் இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த சோசலிச மதசார்பற்ற ஜனநாயகக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமூக பொருளாதார அரசியல் தளங்களில் நீதியும், சிந்தனை, சொல், நம்பிக்கை, பற்றுறுதி மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலை மற்றும் வாய்ப்பில் சமத்துவமும் உறுதியாக கிடைக்க செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும் நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் விதத்தில் சகோதரத்துவத்தை அனைவரிடையே வளர்க்க உறுதி ஏற்போம் என்று பேசினர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் ரெத்தினம், பாலகிருஷ்ணன், வடிவேல், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dohaigamalai Communist ,Indian Constitutional Charter ,Party ,
× RELATED காங்கிரஸில் இணைய நடிகர் மன்சூர் அலிகான் விண்ணப்பம்..!!