×

அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

அரவக்குறிச்சி, ஜன. 28: அரவக்குறிச்சியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் மாணவர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரவக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் மாணவர் விழிப்புணர்வு பேரணியை அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார். அரவக்குறிச்சி எஸ்ஐ சென்ராயன், நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். சாலை விதிகளை மதித்துச் செல்லுதல், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது கவனக்குறைவாக ஓட்டுவது, செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து பாதிப்புகள், மோட்டார் வாகன சட்டப்படி வாகனங்களை ஓட்டுதல், அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, விபத்து ஏற்படாமல் தேசிய நெடுஞ்சாலையில் எவ்வாறு பாதுகாப்புடன் செல்ல வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துக்களை வலியுறுத்தி மாணவர்கள் கோஷம் எழுப்பியவாறு சென்றனர். பேரணி பேருந்து நிலையத்தில் துவங்கி தாலுகா அலுவலம் அருகே முடிந்தது. ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலையில் வந்த வாகனங்களின் பின்புறம் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் ஒளி உமிழும் சிகப்பு பட்டைகள் ஒட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : awareness rally ,Aravakurichi ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி