×

ஓசூர் பகுதியில் ஏரிகளை பராமரிக்க கோரி விழிப்புணர்வு பேரணி

ஓசூர், ஜன.28: ஓசூர் பகுதியில் உள்ள ஏரிகளை பராமரிக்க வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஓசூர் பகுதியில் பழமையான ராமநாயக்கன் ஏரி, அலசநத்தம் ஏரி, தேர்பேட்டை ஏரி, சின்ன எலசகிரி ஏரி, மூக்கண்டப்பள்ளி ஏரி, ஜூஜூவாடி ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் உள்ளன. இந்நிலையில், தனியார் பள்ளி மற்றும் தொழிற்சாலை நிர்வாகங்கள் சார்பில் ஏரிகள் பராமரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மழைநீரை சேகரிக்க வேண்டும், ஏரிகளை அசுத்தம் செய்யாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், பிளாஸ்டிக் குப்பைகளை ஏரியில் கொட்டக்கூடாது,  ஏரிகளை சுற்றிலும் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்தவாறு சென்றனர்.

Tags : Awareness rally ,lakes ,Hosur ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி