கோவை, ஜன.28: திருப்பூர் 15.வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 71-வது குடியரசு தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் ஈ.வேலுச்சாமி தலைமை வகித்தார். முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்றார். அறக்கட்டளை பொருளாளர் சுருதி குடியரசு தினத்தின் சிறப்புகள் குறித்து பேசினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் பரிசுகளை வழங்கி பாரட்டினார்.
விழாவில் மாணவ மாணவிகளின் தேசபக்தி பாடல்கள், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் மாணவ மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.