திருப்பூர், ஜன.28: திருப்பூர் மாநகர பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மாநகர மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்க்கொண்டனர். அப்போது, மண்ணரை டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது விற்றதாக திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் குறிச்சியை சேர்ந்த சண்முகம் (42) என்பவரை கைது செய்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் பல்லடம் ரோடு டாஸ்மாக் கடை அருகே மதுவிற்றதாக திருப்பூர், காலேஜ் ரோடு ராஜா பாண்டி (30) என்பவரை கைது செய்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.