×

மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற கோத்தகிரி மாணவிக்கு பாராட்டு விழா

குன்னூர்,ஜன.28: மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற 5ம் வகுப்பு மாணவிக்கு விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. கோத்தகிரியை பூர்வீகமாக கொண்ட மாணவி சுபாஷினி கோவையில் உள்ள அரசு  உதவிபெறும் பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மாணவிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குன்னூரில் உள்ள விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பில் நடந்த விழாவில் மாணவிக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

Tags : Gold medal ceremony ,Malaysia ,
× RELATED சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 5,000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்