×

முகநூல் பழக்கத்தால் பிரிட்டன் பணத்தை ரூபாயாக மாற்றித்தர கேட்ட பெண்

சூலூர்,ஜன.28 ;  முகநூல் மூலம் பழகிய பிரிட்டன் பெண் திடீரென கோவைக்கு வந்து பிரிட்டன் பணத்தை ரூபாயாக மாற்றித்தர கேட்டதால் அதிர்ச்சியடைந்த விமானப்படை வீரர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  சூலூர் விமானப்படைத் தளம் இந்தியாவிலேயே மிகவும்  ரகசியமான விமானத் தளம் ஆகும். இங்கு பணிபுரியும் விமானப்படை வீரர் ஒருவர் தனது முகநூல் மூலம் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நண்பராக சேர்ந்து சேட்டிங் செய்து வந்துள்ளார்.கடந்த சில மாதங்களாக நடைபெற்ற இந்த முகநூல் நட்பு இருவரிடையே அதிகரித்து வந்துள்ளது. கடந்த சில தினங்களாக பிரிட்டன் பெண் அதிக அளவில்  விமானப்படை வீர்ருடன் சேட்டிங் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அந்த பெண் விமானப்படை வீரரை முகநூலில் தொடர்பு கொண்டார். தான் பிரிட்டனில் இருந்து கோவைக்கு வந்துள்ளதாகவும், கோவை விமான நிலையத்தில் இருப்பதாகவும் கூறினார்.மேலும் தன்னிடம் உள்ள பிரிட்டன் பணம் (பவுண்ட்) உள்ளதாகவும், அதை ரூபாயாக தனக்கு மாற்றித்தர வேண்டும் எனவும் முகநூலில் தகவல் அனுப்பினார்.இதனால் அதிர்ச்சியடைந்த விமானப்படை வீர்ர் தனது உயர் அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தைக் கூறினார். இதைத்தொடர்ந்து அவர்களது ஆலோசனையின்பேரில் சூலூர் காவல் நிலையத்தில் விமானப்படை வீரர் புகார் அளித்தார்.போலீசார் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Britain ,
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்