×

தர்மபுரியில் கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்

தர்மபுரி, ஜன.28:  தர்மபுரி மாவட்ட கிராம சுகாதார செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது.
போராட்டத்திற்கு சங்க நிர்வாகி கனகவள்ளி தலைமை வகித்தார். நிர்வாகிகள் மாதம்மாள், எம்.மாதம்மாள், ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணம்மாள், சங்க கூட்டமைப்பு பொறுப்பாளர் தமிழ்செல்வி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். போராட்டத்தில், சுகாதாரத்துறை செவிலியர்களுக்கு மூத்தோர், இளையோர் என ஊதிய முரண்பாடு உள்ளது. அது களைய வேண்டும். கிருஷ்ணகிரி, கடலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் செவிலியர்கள் மீது போடப்பட்டுள்ள குற்ற குறிப்பாணைகளை திரும்பபெற வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர் சங்க நிர்வாகி சேரலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புவனேஸ்வரி நன்றி கூறினார்.


Tags : health nurses ,Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி