×

பென்னாகரம் அருகே மாரியம்மன் கோயிலில் ₹1 லட்சம், நகை கொள்ளை

தர்மபுரி, ஜன.28:  பென்னாகரம் அருகே மாரியம்மன் கோயிலில் ₹1 லட்சம் பணம், நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  தர்மபுரி அடுத்த பெரும்பாலை அருகே, எர்ரப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் தை அமாவாசை என்பதால், சிறப்பு பூஜைகள் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு கோயில் பூசாரி பூஜை செய்து விட்டு கோயிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை, வந்து பார்த்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருட்டு போனது தெரியவந்தது.  இதுகுறித்து, பெரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் நடத்திய விசாரணையில், அம்மன் கழுத்தில் இருந்த தாலி, உண்டியலில் இருந்த ₹1 லட்சம் ரொக்கம், 5 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Pennagaram ,Mariamman temple ,
× RELATED புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்