சென்னை: இன்னொரு நிறுவனத்தை பற்றி ஆவதூறாக பேசியதாக தனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்தி சித்ரவதை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை மேற்கு மாம்பலம் முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (38). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 24ம் தேதி காலை அசோக் நகர் 10வது அவென்யூவில் நடந்து ெசன்றபோது, காரில் வந்த கும்பல், ராமசுப்பிரமணியனை வழிமறித்து குண்டுக்கட்டாக தூக்கி காரில் ஏற்றி சென்றது. பின்னர் வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள ஒரு லாட்ஜிக்கு அழைத்து சென்றுள்ளனர்.