×

திசையன்விளையில் ‘108'க்கு மலரஞ்சலி

திசையன்விளையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தாலும், மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கே செல்ல வேண்டியுள்ளது. இதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. சமீபத்தில் இன்பதுரை எம்எல்ஏ முயற்சியால், பழைய வாகனம் மாற்றப்பட்டு புதிதாக 108 ஆம்புலன்ஸ் திசையன்விளைக்கு வந்தது. இந்நிலையில் இந்த ஆம்புலன்ஸ் பழுதாகி உள்ளதாகவும், உதவியாளர் மற்றும் பைலட் இல்லை எனக்கூறி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த பாஜ மற்றும் இந்து முன்னணியினர், 108 ஆம்புலன்சுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் வட்டார மருத்துவ அலுவலர் கண்ணனிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர். இதில் ராதாபுரம் ஒன்றிய பாஜ தலைவர் சேர்மத்துரை, இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஷ், கிளை செயலாளர் ராஜசேகர், பலவேசம், கனகராஜ், இந்து கிராம கூட்டமைப்பு முருகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பனையில் இருந்து விழுந்து தொழிலாளி பலி