அம்பை, ஜன. 24: அம்பை அருகே ஊர்காட்டில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் மற்றும் கல்லிடைக்குறிச்சி அருகே சிங்கம்பட்டியில் ரூ.17.64 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. முருகையா பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அம்பை ஆர்டிஓ அலுவலகம் அருகே பல கோடியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் தாசில்தார் கந்தப்பன், அம்பை நகராட்சி ஆணையர் ஜின்னா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம். செயற்பொறியாளர் ஹசன் இப்ராகிம். உட்கோட்ட பிரிவு உதவி செயற்பொறியாளர் பாலமோசேதயாளன். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சண்முகநாதன். கிஷோர்குமார், உதவி பொறியாளர் சந்திரா, அதிமுக மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் மாடசாமி, நகர செயலாளர்கள் அறிவழகன், சங்கரநாராயணன், ராமையா, துணை செயலாளர் மதன், மினிசூப்பர் மார்க்கெட் தலைவர் சங்கரலிங்கம், முன்னாள் நகராட்சி துணை தலைவர் மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர் விஜயபாலாஜி, ரமேஷ், மாவட்ட பிரதிநிதி சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.