வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

வி.கே.புரம், ஜன. 24:  அம்பை வருவாய்த்துறை மற்றும் தேர்தல் பிரிவு சார்பில் பாபநாசத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருவள்ளுவர் கல்லூரியில் துவங்கிய பேரணிக்கு கல்லூரி முதல்வர் சுந்தரம் தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு மண்டல துணை தாசில்தார் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ஐ முருகன் வரவேற்றார். பேரணியை அம்பை தாசில்தார் கந்தப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நடந்த இந்த பேரணி, மெயின் ரோடு வழியாக டாணா வரை நடைபெற்றது. இதில் திருவள்ளுவர் கல்லூரி மாணவர்கள் மற்றும் விஏஓ தங்ககுமார், உதவியாளர் முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: