×

முத்தையாபுரத்தில் கர்ப்பிணி மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்குப்பதிவு

ஸ்பிக்நகர், ஜன.24:முத்தையாபுரத்தில் கர்ப்பிணியை தாக்கியதாக பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். தூத்துக்குடி, முத்தையாபுரம், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மனைவி பேச்சியம்மாள்(24). இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பேச்சியம்மாள், தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டிற்கு அருகில் குடியிருந்து வரும் மாரிமுத்து மனைவி அம்பிகா, பால்பாண்டி மனைவி தங்கமணி, மாரியப்பன் மனைவி மேரி, மாரிமுத்து மகன் சுவாமிநாதன் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அவர்கள் பேச்சியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த பேச்சியம்மாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில், அம்பிகா, தங்கமணி, மேரி, சுவாமிநாதன் ஆகிய 4பேர் மீது போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா