×

விபத்தில் பலியான கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு

தூத்துக்குடி,ஜன.24:விபத்தில் பலியான கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு 30 லட்சம் இழப்பீடு வழங்க கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தூத்துக்குடி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்தவர் பாபுசுனில். இவரது மகன் தங்கசிவராமன்(21). இவர் கோவையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 10.04.20217ல் கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் ரோட்டில் பைக்கில் சென்றார். சிட்டிபாளையம் மரப்பாலம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதி தங்கசிவராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் தங்களுக்கு ரூ.50 லட்சம்  இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரி பாபுசுனில், அவரது மனைவி செல்வமணி ஆகியோர் தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் வக்கீல் ரவீந்திரன் மூலம் வழக்கு தொடர்ந்தனர். வழக்கினை நீதிபதி சிவஞானம் விசாரித்தார். மேலும் விபத்துக்கு காரணமான லாரியின் இன்சூரன்ஸ் நிறுவனம் விபத்தில் பலியான தங்கசிவராமன் குடும்பத்தினருக்கு ரூ.30.54 லட்சத்தை இழப்பீடாக வழங்கவேண்டும், மேலும் அந்த இழப்பீட்டிற்கு வழக்கு தொடர்ந்த காலத்தில் இருந்து 7.5% வட்டியுடன் வழங்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : college student ,
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது