×

நாலுமாவடியில் 26ம்தேதி மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை

நாசரேத், ஜன.24: நாலுமாவடியில் வருகிற 26ம்தேதி பொது தேர்வெழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் மோகன்.சி.லாசரஸ் பங்கேற்கிறார். தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் இயேசு விடுவிக்கிறார் வாலிபர் ஊழியம் சார்பில் அரசு தேர்வெழுதும் மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் வருகிற 26ம்தேதி மதியம் 1 மணிமுதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடுகின்றனர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன்.சி.லாசரஸ் சிறப்பு செய்தி கொடுத்து சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கிறார். இதில் கல்வியாளர்களின் ஆலோசனைகள், மருத்துவர்களின் அறிவுரைகள் இடம் பெறுகிறது. கூட்டம் முடிந்தவுடன் வெளியூர்களுக்கு செல்வதற்கு பேரூந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.  ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஜெபக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Tags :
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு