×

ஷேர்ஆட்டோவில் சென்ற மூதாட்டியின் ரூ.2.50 லட்சம் நகை மாயம்

தூத்துக்குடி, ஜன.24: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள பண்டாரவிளையைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி சந்திரா(67). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து  சண்முகபுரத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது அவர் கழுத்தில் கிடந்த ஒன்பதரை பவுன் செயின் மாயமானதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் ஆகும். இதுகுறித்து சந்திரா தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : grandfather ,
× RELATED பவானி அருகே கொண்டாடப்பட்ட தாத்தா,...