வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

தூத்துக்குடி, ஜன.24:தூத்துக்குடி தாளமுத்துநகர் துப்பாஸ்பட்டியைச் சேர்ந்தவர் பிராட்டி(50). உப்பள தொழிலாளி. இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது யாரோ ஒரு மர்ம நபர் பூட்டை உடைத்து பிராட்டியின் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த பித்தளை  பாத்திரங்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டதாக தெரிகிறது.இதுகுறித்து பிராட்டி தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பேச்சி (25) என்பவர் பித்தளை பாத்திரங்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பேச்சியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: