உடுமலை,ஜன.24: உடுமலை அருகே உள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தின விழா நடந்தது. பள்ளியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தலைமை வாக்குச்சாவடி அலுவலராக மாணவி பணியாற்றினார். மாதிரி வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடியில் நடப்பதுபோன்றே அனைத்து பணிகளும் நடந்தன. வெற்றி பெற்றவர்கள் ஒவ்வொரு வகுப்புக்குரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.