×

நகை, பணம் திருடிய போது கூச்சலிட்டதால் மூதாட்டியை வெட்டிய வேலைக்கார பெண் கைது

திருப்பூர், ஜன.24: திருப்பூர் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்த நாச்சம்மாள் (85). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நாச்சம்மாள் வீட்டில் வேலை செய்யும் தேனி பகுதியை சேர்ந்த புஸ்பம் (50) என்பவர் நாச்சம்மாள் வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த இரண்டே முக்கால் பவுன் நகை மற்றும் ரூ. 6 ஆயிரம் பணத்தை திருட முயன்றார். இதனை அறிந்த நாச்சம்மாள் கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த புஸ்பம் அரிவாளால் நாச்சம்மாளை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் நாச்சம்மாள் காயமடைந்தார்.   அருகிலிருந்தவர்கள் நாச்சம்மாளை மருத்துவமனையில் அனுமதித்த பின் புஸ்பத்தை பிடித்து வீரபாண்டி போலீசில் ஒப்படைத்தனர். நாச்சம்மாளின் சகோதரர் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வீரபாண்டி போலீசார் புஸ்பத்தை கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் அவரிடமிருந்த 2.75 பவுன் நகை,ரூ. 6 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : jewelery ,
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை