குழந்தை இல்லாத ஏக்கம் ஆசிரியை தற்கொலை

திருப்பூர்,ஜன.24: திருப்பூர், கோல்டன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த 2016 ம் ஆண்டு மதுரை மாவட்டம், அச்சம்பட்டு பகுதியை சேர்ந்த மீனாட்சி (22) என்பவரை திருமணம் செய்து கொண்டார். மீனாட்சி திருப்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருமணமாகி 4 ஆண்டுகள் சென்ற நிலையிலும் குழந்தை இல்லாததால் மன விரக்தியில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனாட்சி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குறித்து வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: