×

குன்னூர் நகராட்சியில் ரூ.18 லட்சம் வாடகை நிலுவை பார்க்கிங் ஏரியாவுக்கு சீல்

குன்னூர், ஜன.24:குன்னூர் நகராட்சியில் ரூ.18 லட்சம் வாடகை தராததால் பார்க்கிங் ஏரியாவிற்கு சீல் வைக்கப்பட்டது. குன்னூர் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான பார்க்கிங் உள்ளது. இந்த பார்க்கிங் டெண்டர் முறையில் வாடகைக்கு விடப்படுகிறது. பார்க்கிங் உரிமையாளர் கடந்த எட்டு ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் இருந்துள்ளார். பல முறை எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தும் வாடகை பாக்கியை செலுத்தாததால் நகராட்சிக்கு ரூ.18 லட்சம்  வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷ்னர் பாலு பார்க்கினை சீல் வைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக  பார்க்கினை இழுத்து மூடி சீல் வைத்தனர். இதுபோன்று குன்னூர் மார்க்கெட் பகுதி, நகராட்சி குடியிருப்புகளில் அதிகளவில் வாடகை பாக்கி நிலுவையில் உள்ளதால் அவற்றில் கடைகள் மற்றும் குடியிருப்புவாசிகள் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். நகராட்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை முறையாக செலுத்தாததால் குன்னூர் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று வாடகை தராமல் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : municipality ,parking area ,Coonoor ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை