×

குரூப்-1 தேர்வுக்கு பயிற்சி பெற அழைப்பு

ஊட்டி,ஜன.24: ஊட்டி  மாவட்ட நூலகத்தில் நடைபெற உள்ள குரூப்-1 பயிற்சி பெற விரும்புபவர்கள்  வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மைய நூலகர் ரவி கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 பணிகளுக்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 19ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம்.  இதற்காக முதல்நிலை எழுத்து தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடக்கிறது. நீலகிரி  மாவட்டத்தில் குரூப்-1 தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு சிறப்பு  பயிற்சி அளிக்க ஊட்டியில் உள்ள மாவட்ட மைய நூலகம் திட்டமிட்டுள்ளது.  இதன்படி வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை சனிக்கிழமை  மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு  பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இப்பயிற்சியில் பங்கேற்ற விருப்பமுள்ள  மாணவ, மாணவிகள் தங்களது பெயரை நூலகத்தில் வரும் 30ம் தேதிக்குள்  முன்பதிவு செய்து கொள்ளலாம். 0423-2445963 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது  dclootylibrarian@gmail.com என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். எனவே  நீலகிரி மாவட்ட இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி முகாமில்  கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட மைய நூலகர் ரவி தெரிவித்துள்ளார்.

Tags : Group-1 Selection ,
× RELATED குரூப்-1 தேர்வு முறைகேடு புகார்...