கோவை, ஜன.24:பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகேயுள்ள சீரிப்பாளையத்தை சேர்ந்தவர் கோபால்(44). இவர் தனது காரை வீட்டின் முன்பு கடந்த 20ம் தேதி இரவு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது கார் மாயமாகியிருந்தது. இது குறித்து நெகமம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை திருடியது அன்னூர் அருகேயுள்ள செல்லப்பனூரை சேர்ந்த பிரகாஷ்(24), வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த ஆனந்த் என்கிற ஆனந்தகுமார்(23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்தனர்.இதேபோல் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார்(29), இவர் அங்குள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸில் லாரி டிரைவராக பணிபுரிகிறார். இவர் சம்பவந்தன்று பொள்ளாச்சியில் ஒரு கடையில் சரக்குகளை இறக்கி சப்ளை செய்தார். அப்போது லாரியில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள், மற்றும் ஒரு பைக் ஆகியவை மாயமானது. இது குறித்து மேற்கு போலீசார் வழக்குபதிந்து வுிசாரணை நடத்தி, சிகரெட் பண்டல் மற்றும் பைக்கை திருடிய குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ஜோதிபாண்டியன்(30) என்பவரை கைது செய்து, சிகரெட் பண்டல்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.