×

தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு ஜன.30ம் தேதி மறைமுக தேர்தல்

ஈரோடு, ஜன.24: ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு வரும் 30ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், பஞ்சாயத்து துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதில், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்காததாலும், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த தேர்தலில் வாக்குப்பெட்டியை அ.தி.மு.க. உறுப்பினர் எடுத்து சென்றதாலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், சென்னிமலையில் ஊராட்சியில் கொடுமணல் மற்றும் புஞ்சை பாலத்தொழுவு பஞ்சாயத்து துணை தலைவர்களுக்கான மறைமுக தேர்தலும் பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒன்றிய தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கும், அதேபோல் கொடுமணல் மற்றும் புஞ்சை பாலத்தொழுவு பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஒன்றிய தலைவர் மற்றும் பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு காலை 10.30 மணிக்கும், ஒன்றிய துணை தலைவர் பதவிக்கு மதியம் 3 மணிக்கும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அசாம்பாவித சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவன், எஸ்பி சக்திகணேசனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : election ,President ,Vice Presidency ,
× RELATED முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும்...