கூட்டுறவு வங்கியில் ரூ.98 லட்சம் கடனுதவி

ஈரோடு, ஜன. 24: ஈரோடு கூட்டுறவு நகர வங்கயில் மகளிர் சுயஉதவிக்குழுவினர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. ராமலிங்கம் கலந்து கொண்டு கடனுதவிகளை வழங்கினார். அதன்படி, மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வீட்டு அடமான கடன் என 98 லட்சம் ரூபாய்க்கான கடனுதவிகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், மேலாண்மை இயக்குநர் மீனாஅருள், துணைத்தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், வங்கியின் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: