×

முத்துப்பேட்டை அரசு பள்ளிகளில் பள்ளி பரிமாற்ற திட்டத்தில் வினாடி வினா போட்டி

முத்துப்பேட்டை, ஜன.24: முத்துப்பேட்டை அடுத்த கோபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த பள்ளி பரிமாற்றுத் திட்ட விழாவிற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்தன்னா தலைமை வகித்தார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் தனபாக்கியம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆசாத்நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலிருந்து 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு உடல் நலம், சுகாதாரம், பேரிடர் தொடர்பான வினாடி வினா நிகழ்வு நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. நிலவரைபடம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன. அறிவியல் நிகழ்வுகள், மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. அதேபோல் மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளியிலிருந்து 20மாணவர்கள் ஓவரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும், எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 20 பேர் அரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும், மருதவனம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து 20மாணவர்கள் வௌ்ளங்கால் ஊராட்சி நடுநிலை பள்ளிக்கும், உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஆள்காட்டுவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து 20 மாணவர்களும், புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 20மாணவர்களும், கோவிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்து 20மாணவர்களும், இந்தப் பள்ளி பரிமாற்ற திட்ட விழா நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்தநிலையில் முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் பல பள்ளிகளில் நடந்த இந்த பரிமாற்ற திட்ட நிகழ்வை முத்துப்பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் சொக்கலிங்கம், முருகபாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.

Tags : Quiz Competition ,Government Schools ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...