தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த தொழிலாளி

சேலம், ஜன. 24: சேலம் சூரமங்கலம் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சாகுல்(35). வெள்ளி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த சாகுல்,  வீட்டில் இருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் வலியால் அவர் துடித்தார். உடனே வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: