×

திருச்செங்கோட்டில் வாக்காளர்களுக்கு எம்பி நன்றி அறிவிப்பு

திருச்செங்கோடு, ஜன.24: திருச்செங்கோடு பகுதியில், நாமக்கல்  எம்பி சின்ராஜ் வாக்காளர்களுக்கு நேற்று நன்றி  தெரிவித்தார். திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும், அவர் நேரில்  சென்றார். அவருடன் திமுக நகர செயலாளர் கார்த்திகேயன், பொறுப்புக்குழு  உறுப்பினர்கள் ராஜேந்திரன், மாதேஸ்வரன், பெருமாள், ரமேஷ், மகேஸ்வரி,  ஆறுமுகம் மற்றும்  கொமதேக நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர். பொதுமக்களிடம் இருந்து  அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து  வரும் மாணவர் வெற்றிவேலுவுக்கு கல்வி உதவித்தொகையாக, தனது சொந்தநிதியில்  இருந்து ₹24 ஆயிரம் வழங்கினார். ஒவ்வொரு வார்டிலும் அவருக்கு பொதுமக்கள் சிறப்பான  வரவேற்பு அளித்தனர்.

Tags : voters ,Tiruchengode ,
× RELATED பெரும்புதூர் நாடாளுன்ற தொகுதியில்...