×

ஒடசல்பட்டி வழியாக சரியான நேரத்திற்கு வராத அரசு டவுன் பஸ்

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.24: பாப்பிரெட்டிப்பட்டியில் சரியான நேரத்திற்கு வராத அரசு பஸ்களால் வேலைக்கு செல்வோர் மற்றும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து, காலை 6 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு ஒடசல்பட்டி, தென்கரை கோட்டை, மெணசி, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக தினசரி சேலம் வந்து செல்கிறது. ஆனால் முக்கியமான விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறைக்கு அடுத்த நாட்களில் அரசு பஸ் வருவதில்லை. இந்த பஸ் வரவில்லை எனில், ஒரு மணிநேரத்திற்கு பின் தான் அடுத்த பஸ் சேலம் செல்ல வருகிறது. காலை 6 மணிக்கு வரும் பஸ் வராததால் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஓடசல்பட்டி வழியாக சேலம் சென்று வரும் அரசு பஸ், தினந்தோறும் இயக்கி சரியான நேரத்திற்கு வந்து செல்ல போக்குவரத்து மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா