×

சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், ஜன. 24: பெரம்பலூரில் மதுபானங்கள் மற்றும் சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெரம்பலூரில் கலால்துறை சார்பில் மதுபானங்கள் மற்றும் சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தாலுகா அலுவலகத்தில் துவங்கிய பேரணியை கலெக்டர் சாந்தா கொடியசைத்து துவக்கி வைத்தார். தாலுகா அலுவலகத்தில் துவங்கி ரோவர் வளைவு, சங்குப்பேட்டை, காமராஜர் வளைவு, வெங்கடேசபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகத்தில் பேரணி முடிந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். பேரணியில் 800க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியில் வருவாய் கோட்டாச்சியர் சுப்பையா, தாசில்தார் பாரதிவளவன் மற்றும் கலால் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Awareness rally ,
× RELATED சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி