×

கிணற்றில் தவறி விழுந்த ஆடு தீயணைப்பு துறையினர் மீட்டனர்

திருவில்லிபுத்தூர், ஜன. 23: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்சாமி. இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்குச் சொந்தமான ஆட்டுக்கிடாய் செவ்வாய்க்கிழமை மாலையில் மேய்ச்சலுக்காக சென்றது. வெகு நேரமாகியும் ஆட்டுக்கிடாய் திரும்பி வராததால் சந்தேகமடைந்த வேல்சாமி தனது உறவினர்களுடன் ஆட்டை தேடிச் சென்றார். அப்போது ஊருக்கு அருகே உள்ள தரைக்கிணற்றில் ஆட்டுக்கிடாய் விழுந்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறை  நிலைய அலுவலர் ராஜமாணிக்கம் தலைமையிலான தீயணைப்பு ஊழியர்கள் முள்ளி குளத்திற்குச் சென்று கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய ஆட்டுக்கிடாயை பத்திரமாக மீட்டனர்.

Tags : goat fire department ,well ,
× RELATED புகழூர் நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் தட்டுப்பாடு இல்லை