கம்பம், ஜன.24: கம்பத்தில் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில தலைவர் கிருஷ்ணன் திறந்து வைத்தார் கிளைச்செயலாளர் குருவரெட்டியார் வரவேற்றார். கிளைத்தலைவர் மாரிமுத்து இனிப்புகளை வழங்கினார். பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார். இவ்விழாவில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.