மத நல்லிணக்க தூதுவர் விருதுகள்

திருப்பரங்குன்றம், ஜன.24: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள காந்திய சிந்தனை துறை சார்பில் மதுரை காந்தி மியூசியம், அருளானந்தர் கல்லூரி, திண்டுக்கல் தமிழ் கல்லூரி ஆகிய தத்துவவியல் துறைகள் இணைந்து தேசிய அளவிலான பயிலரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் துறைத் தலைவர் அழகிரிசாமி வரவேற்றார். துணை வேந்தர் மு.கிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். இதில் மத நல்லிணக்க சிந்தனையோடு பணியாற்றிய மதுரை மறைமாவட்ட பாதிரியார் பி.அந்தோணி பாப்புசாமி, துவாரகா பீடத்தை சேர்ந்த சாந்திகுமார சுவாமிகள், திரு அருள் பேரவை அமானுல்லா கான் ஆகியோருக்கு மத நல்லிணக்க தூதுவர் விருது வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: