சோழவந்தான், ஜன.24: சோழவந்தானில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு எம்.வி.எம்.கலைவாணி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் இருந்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் டாக்டர் மருதுபாண்டியன், முதல்வர் விஜயா, ஆசிரியர், ஆசிரியைகள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.