×

பொதுமக்கள் இன்று மனு அளிக்கலாம்

மதுரை, ஜன. 24: மதுரை மாவட்ட வருவாய்த்துறை சார்பில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் அம்மா திட்ட முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் தாசில்தார்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகின்றனர். இம்முகாம் கள்ளிக்குடி தாலுகாவில் கள்ளிக்குடி சத்திரத்திலும், மேலூர் தாலுகாவில் சிலம்பக்கோன்பட்டியிலும், உசிலம்பட்டி தாலுகாவில் செம்பட்டியிலும், மதுரை கிழக்கு தாலுகாவில் தாமரைப்பட்டியிலும், வாடிப்பட்டி தாலுகாவில் தும்பிச்சான்பட்டியிலும், திருமங்கலம் தாலுகாவில் ஆலம்பட்டியிலும் நடக்கிறது. இதேபோல், மதுரை வடக்கு தாலுகாவில் சாத்தமங்கலத்திலும், பேரையூர் தாலுகாவில் கூவலப்புரத்திலும், மதுரை தெற்கு தாலுகாவில் புளியங்குளத்திலும், மதுரை மேற்கு தாலுகாவில் பொன்மேனியிலும், திருப்பரங்குன்றம் தாலுகாவில் வேடர்புளியங்குளத்திலும் நடைபெறுகிறது. முகாமில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு, பட்டா மற்றும் பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்கள் கொடுக்கலாம். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Tags : public ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...