×

விழிப்புணர்வு பேரணி

மதுரை, ஜன.24: மதுரையில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை ஒட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. மதுரையில் நகர் போலீசார் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வார விழா 4ம் நாளான நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை திலகர் திடல் இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மன்னர் திருமலை நாயக்கர் சிலை, புட்டுத்தோப்பு, மேலப்பொன்னகரம், மதுரா கோட்ஸ் வழியாக மீண்டும் வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரணி முடிவடைந்தது. சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை பற்றியும் விரிவாக விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...