கடைக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

மதுரை, ஜன.24: மதுரையில் பெண்ணிடம் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவைச் ேசர்ந்தவர் பொன்ராஜ் மனைவி மல்லிகா(58). இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது அப்பகுதியில் டூவீலரில் வந்த 2 பேர் மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து அவர் கரிமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.   

Related Stories: