உசிலம்பட்டி, ஜன.24: மதுரை-போடி அகல ரயில்பாதையில் உசிலம்பட்டி வரை இன்று சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில், டிராலிகள் மூலம் நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை-போடி அகல ரயில்பாதையில் உசிலம்பட்டி வரை இன்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதற்காக தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகரன், நிர்வாக முதன்மை அதிகாரி சின்கா ஆகியோர் தலைமையில் நேற்று டிராலிகள் மூலமாக ரயில்வே தடத்தில் ஆய்வு செய்தனர். உசிலம்பட்டி ரயில்நிலையத்தில் இருந்து செல்லம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி, மதுரை வரை உள்ள ரயில் பாதையில் நிலை குறித்தும், வேகம் குறித்தும் ஆய்வு செய்தனர்.